Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | முன்னோடி | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | கவிதைப்பந்தல் | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
குறுக்கெழுத்துப்புதிர்
ஜனவரி 2009: குறுக்கெழுத்துப் புதிர்
- வாஞ்சிநாதன்|ஜனவரி 2009||(1 Comment)
Share:
Click Here Enlargeபா பொங்கல்

பொங்கலுக்கு உங்களுக்கு வெறும் வாழ்த்துச் சொல்வதோடு நிற்காமல் வாட்டும் சொல்லையும் தருகிறேன். சில வருடங்களுக்கு முன்பு எழுதிய ஒரு பழைய சரக்கு இந்தப் பா.

சென்னையில் போகியின்போது எளிய சிறுவர்கள் கரும்பைத் தின்று கொண்டு தாளக்கருவியைக் கொட்டிப் பழந் துணிகளையெல்லாம் எரித்ததைப் பார்த்தபோது எழுதியது. ஆனால் சுற்றுப்புறச் சூழல் கெடக்கூடாதென்று மாசுக் கட்டுப்பாட்டுக்காக அரசின் அறிவுறுத்தலால் கடந்த ஐந்தாறு வருடங்களாக இவ்வழக்கம் குறைந்துவிட்டது என்று கூறவேண்டும். முன்னுரை போதும், இதோ:

கரும்புகை யேந்தி கடித்ததன்சா றுண்டு
கரும்புள்ளைக் கூவிக் கவளங்கள் தந்து
கரும்புகை தோன்றிடக் கந்தலைத்தீக் கிட்டோர்க்
கரும்பும் உளத்தில் களிப்பு

இப்பாடலில் வரும் நான்கு கரும்புகளும் என்னவென்று அறிந்துகொள்வது புதிரை ரசிப்பவர்களுக்கு நல்ல பொழுதுபோக்காக இருக்குமென்று நம்புகிறேன்.

குறுக்காக:
3. எண்ணி முறுக்க எதிரேவா (3)
5. மராட்டிய சனம் சமய விலக்கால் சுற்றி விளையாடுவது (5)
6. இரண்டெழுத்துக் கையெழுத்து போதும் காவலரிடம் அகப்படுவதற்கு (2)
7. ஆற்றை அழைக்க அருள்மொழியிடம் அவள் வருவாளா? (3)
8. சிங்களப் பணியாரத்தைப் பிடிக்க பல இடங்களுக்குச் சென்று செய்த வேலை (5)
11. கலப்பையா? வேண்டாம், ஏராளமான முள் தைத்து வதைத்தாலும் கௌரவத்துடன் இருக்கும் (5)
12. பெருந்தேரோடும் ஊரில் ஒரு கனியை ஒளித்துப் பொழிவது தேவர் வேலை (3)
14. அஞ்சனம் ஒரு தானியத்தில் இல்லாவிட்டால் என்ன, புளியில் இருக்குமே! (2)
16. சுத்தமாகத் தேய்த்த பாத்திரம் போன்ற துறவிகளின் மனப்பக்குவம் (5)
17. வாய்க்கு வந்த படிச் சொல்லி வாயில் சிறியதுதான் (3)

நெடுக்காக:
1. பழைய செருப்பு கடைசியாக ராமா! தனன ததிங்கினத்தோம் (6)
2. ஊதுவதைக் கைப்பிடித்து முன்னுரை (3)
3. அரேபியாவில் பறப்பது வீட்டில் தரையோடு கிடக்கும் (5)
4. நாடகத்திற்கான பயிற்சி பாதி கண்டு ஆச்சரியமடை (2)
9. வேறொரு புரவியை வாங்குவதும் கொடுப்பதும்? (6)
10. விமானத்திற்குச் செல்ல உதவி செய்யும் விலைக் குறைப்பு? (5)
13. மெய்யின்றி இறங்கும் பறவைகளிலிருந்து உதிர்வது (3)
15. திருவனந்தபுரத்து அந்தாதி பாடி வழிபடு? (2)
நீங்கள் புதிர் மன்னரா?

குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை டிசம்பர் 15-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com. டிசம்பர் 15-க்குப் பிறகு, விடைகளை www.tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.

vanchinathan@gmail.com

டிசம்பர் 2008 - புதிர் மன்னர்கள்
Share: 




© Copyright 2020 Tamilonline