Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சமயம் | சிறப்புப் பார்வை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர்கடிதம் | மேலோர் வாழ்வில்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
கல்கண்டு வடை
உளுத்தங் களி
- மரகதம் அம்மா|மார்ச் 2020|
Share:
தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து - 1/2 கிண்ணம்
பச்சரிசி - 1 மேசைக்கரண்டி
வெந்தயம் - 1 மேசைக்கரண்டி
கருப்பட்டி - தேவைக்கு ஏற்ப
சுக்குப்பொடி - 1 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி

செய்முறை
கருப்பு உளுந்து, பச்சரிசி, வெந்தயம் இவற்றை ஒன்றாகச் சேர்த்து 8 மணி நேரம் ஊற வைக்கவும். அதை மிக்சியில் போட்டு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நல்ல வழுவழுப்பாக அரைக்கவும். அரைத்த மாவில் நான்கு மடங்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, விடாமல் கிண்டவும்.

மாவு வெந்து கெட்டியாக வரும்போது அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். கருப்பட்டியில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, மற்றொரு அடுப்பில் வைத்துச் சூடாக்கி அந்தப் பாகை மண் இல்லாமல் வடிகட்டவும். அதை வெந்து கொண்டிருக்கும் மாவில் சேர்த்து அத்துடன் சுக்குப்பொடி, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்றாகச் சூடானதும் அடுப்பலிருந்து இறக்கி விடவும்.

உளுந்தைத் தோலுடன் சாப்பிட்டால் உடம்பு வலுப்படும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
மரகதம் அம்மா,
அட்லாண்டா, ஜார்ஜியா
More

கல்கண்டு வடை
Share: 




© Copyright 2020 Tamilonline