Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
Access Braille: 'சரணாகதி'
கச்சேரி: மானஸா சுரேஷ்
மிச்சிகன்: பராசக்தி கோவில்
அரங்கேற்றம்: சரஸ் சென் சிங்
அரங்கேற்றம்: சஞ்சனா-சிதாரா
அரங்கேற்றம்: ஷ்ருதி ரவிசங்கர்
கச்சேரி: திவ்யா மோஹன்
அரங்கேற்றம்: வர்ஷினி ராமநாதன்
BATM – கைப்பந்துப் போட்டி
அரங்கேற்றம்: ஹரிணி ஷா
லாஸ்யா: 'விம்சதி'
அரங்கேற்றம்: ஷ்ருதி சந்திரா
- காந்தி சுந்தர்|அக்டோபர் 2012|
Share:
நாட்டிய தருமி நடனப் பள்ளி மாணவி ஷ்ருதி சந்திராவின் அரங்கேற்றம் மிச்சிகனின் சீஹோம் ஹைஸ்கூலில் நிகழ்ந்தது. வழுவூர் பாணியில் நடனம் பயின்று வரும் ஷ்ருதி முதலில் எடுத்துக் கொண்ட பாடல் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவின் 'பிறை அணியும் பெருமான்'. ஞான சபேசர் ஸ்தோத்திரத்திற்கு அற்புதமாய்ப் பதம் வைத்தார். பிறகு புஷ்பாஞ்சலி, மல்லாரி, ஜதிஸ்வரம் ஆகியவற்றை விறுவிறுப்புடன் ஆடினார். சப்தத்திற்கு பாபநாசம் சிவனின் 'நீ இறங்காயெனில்”, வர்ணத்திற்கு மதுரை முரளிதரனின் 'ஆடல் நாயகன்' ஆகியவற்றை எடுத்துக்கொண்டார். புரந்தரதாசரின் 'ஜகதோத்தாரணா' அருமை. தில்லானாவுக்குப் பின் நூரணி சிவராமன் இயற்றிய 'சுவாமி பொன்னையப்பன்' பாடலுக்கு ஆடி, பின் லவாங்கி ராகத்தில் அமைந்த 'ஓம்கார காரிணி' பாடலுக்கு ஆடியது வெகு நேர்த்தி. மங்களத்துடன் நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

குரு சந்தியா ஆத்மகூரி வழுவூர் பாணியில் பலரை பயிற்றுவித்து வருகிறார். சமீபத்தில் காலமான வேம்பட்டி சின்னசத்தியத்தின் பிரதான சிஷ்யைகளில் சந்தியாவும் ஒருவர். ஷ்ருதியின் தாத்தா நூரணி சிவராமன் நாம சங்கீர்த்தனத்தில் வல்லுநர். தன் பேரன், பேத்தி என அனைவருக்கும் இக்கலையை பயிற்றுவித்து ஊக்குவிக்கிறார். ஷ்ருதியின் தந்தை நூரணி சந்திரா திரை இசைக்குழு நடத்தி வருகிறார். சுனாமி போன்ற பலவற்றுக்கு நிதி திரட்டி அளித்திருக்கிறார். குரு சந்தியா ஆத்மகூரி (நட்டுவாங்கம்), பத்மா சுந்தர் (வாய்ப்பாட்டு), பார்கவி பிரபு (வயலின்), ஜெயசிங்கம் (மிருதங்கம்). அநிருத் ஸ்ரீதர் (புல்லாங்குழல்) ஆகியோர் நிகழ்ச்சிக்கு பக்கபலமாக இருந்தனர். ஷ்ருதியின் தந்தை நூரணி சந்திராவும் பாடியது சிறப்பு.
காந்தி சுந்தர்,
மிச்சிகன்
More

Access Braille: 'சரணாகதி'
கச்சேரி: மானஸா சுரேஷ்
மிச்சிகன்: பராசக்தி கோவில்
அரங்கேற்றம்: சரஸ் சென் சிங்
அரங்கேற்றம்: சஞ்சனா-சிதாரா
அரங்கேற்றம்: ஷ்ருதி ரவிசங்கர்
கச்சேரி: திவ்யா மோஹன்
அரங்கேற்றம்: வர்ஷினி ராமநாதன்
BATM – கைப்பந்துப் போட்டி
அரங்கேற்றம்: ஹரிணி ஷா
லாஸ்யா: 'விம்சதி'
Share: 




© Copyright 2020 Tamilonline