Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | தகவல்.காம்
Tamil Unicode / English Search
கவிதைப்பந்தல்
பிறவிப் பயன்
வேதம்
அப்பாவின் முடி
- ஹரி கிருஷ்ணன்|ஜூலை 2003|
Share:
அப்பாவின் புத்தகத்தில்
அறுபத்தேழாம் பக்கத்தில்
ஒட்டிக் கிடக்குது
ஒற்றை முடி.

அவர் எரிந்து
ஆறு வருஷமாச்சு.

புருவத்திலிருந்தோ,
இமைகளிலிருந்தோ
(அவருக்கு மீசை இருந்ததில்லை)
எப்படி விழுந்ததோ
இதுமட்டும் இன்னும்
பத்திரமாய்...

நான் வைத்த கொள்ளிக்குத் தப்பி.

அப்பாவின் புத்தகத்தில்
அறுபத்தேழாம் பக்கத்தில்
ஒட்டிக் கிடக்குது
ஒற்றை முடி.
வளைந்த வில்லினைப்போல்.
தூக்கிய தேளின் கொடுக்கைப் போல்..

எண்ணம் அறுந்து என்மனமோ
இறுகும் என்னை அறுவருக்கும்.

அப்பாவை நினைத்தால்
வில்லும் தேளுமா நெஞ்சில் வரும்?

அன்பான அப்பனிலும்
ஆத்திரம்தான் எஞ்சிடுமா?

வடுதடவும் விரல்போல - என்
மனம்தடவும் ஒற்றை முடி.
அறுபத்தேழாம் பக்கத்தில்

(ஓர் அதிகாலைக் கனவில் அப்பாவைப் பார்த்து திடுக்கிட்டு விழித்தபோது)

கவிஞர் ஹரிகிருஷ்ணன்
More

பிறவிப் பயன்
வேதம்
Share: 




© Copyright 2020 Tamilonline