Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | விளையாட்டு விசயம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | ஜோக்ஸ் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
கவிதைப்பந்தல்
அயரச் செய்த அபலேச்சியன் அழகு!
- |பிப்ரவரி 2002|
Share:
மழையின் வருகையில் மகிழ்ந்ததுண்டு
நதியின் அணைப்பினில் பயன் பெற்றதுண்டு
கடலின் அழகினில் மயங்கியதுண்டு
மலையின் வலிமையை வியந்ததுமுண்டு!

பூவின் மணம்தனை முகர்ந்ததுமுண்டு,
இலையின் ருசியை ரசித்ததுமுண்டு,
காயின் சுலையை புசித்ததுமுண்டு,
மரங்களின் நிழலினில் களித்ததுமுண்டு!

இயற்கையின் பசுமையின் வண்ணக்கலவையில்,
இதுவரை மகிழ்ந்து பயன் பெற்ற மனதினில்
அபலேச்சியன் எனும் மலையைப் பார்த்தபின்
பூசுமையின் அழகினும் உலர்ந்திட்ட இலைகளில்,
பலவித வண்ணங்கள் இருப்பதைப் பார்த்தேன்!
மாந்துளிர் வண்ணமும் மஞ்சள் வண்ணமும்,
தேன்துளிர் வண்ணமும் வானவில் போன்று
பலவித மலர்களைக் கோர்த்தது போலவும்,
காற்றினில் அசைந்தலை ஒலித்தபோதெந்தன்,
உள்ளக்களிப்பினை எவ்விதம் சொல்வேன்!

உலர்ந்திட்ட இலைகளில் இத்தனை அழகினை,
இனைத்தெம்மை மகிழ்ந்திடச்செய்திடும் - அந்த
இறைவனின் திறமையை எடுத்துச் சொல்ல
வையக மாந்தரின் வார்த்தைகள் போதா!

S. சரோஜா ராவ்
Share: 




© Copyright 2020 Tamilonline