Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2001 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | சமயம் | தகவல்.காம் | குறுக்கெழுத்துப்புதிர் | முன்னோடி | சிறுகதை
பொது | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | கதிரவனை கேளுங்கள் | சினிமா சினிமா | தமிழக அரசியல் | வாசகர் கடிதம் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல்
Tamil Unicode / English Search
கவிதைப்பந்தல்
சங்கீதக் கொடி
- ரோஸ் முரளி கிருஷ்ணன்|டிசம்பர் 2001|
Share:
இசையென்னும் பெயராலே
வசையாத மனமேது
திசையெங்கும் சென்றாலும்
இசையில்லா மதமேது
சங்கத் தமிழில் சங்கீதம்
வங்கக் கடலலையும் கீதம்
வெண்கல மணி கிங்கிணுக்கையிலே
அங்கும் புனித சங்கீதம்
அசைப் போடும் ஆவினமும்
பசி மறந்த பேரறிவும்
ருசித்திட்ட திரு நாமம்
இசை என்னும் ஒரு நாமம்
பிறப்பிற்கு ஓர் ராகம்
இறப்பிற்கும் ஓர் ராகம்
சிரிப்பிற்கும் ஓர் ராகம்
வெறுப்பிற்கும் ஓர் ராகம்
களிப்பிற்கும் ராகமுண்டு
சிறப்பிற்கும் ராகமுண்டு
காதலர்கள் கரம்சேர
ஸ்ருங்கார ராகமுண்டு
கோபத்தில் இசையுண்டு
தாபத்தில் இசையுண்டு
பரதம், கதக் குச்சுபுடி
கதக்களியில் இசையுண்டு
கடற்கரையில் வேர்க்கடலை
வறுப்பவன் கை இசையுண்டு
ராகதானம் பல்லவி செய்
கலைஞனிடம் இசையுண்டு
ராகத்திற் கிசையாத
எவ்வுயிர் இவ்வுலகிலுண்டு
சங்கீதக் கொடியே நீ
சந்தோஷமாய் பறவாய்.
ரோஸ் முரளி கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline