Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சிறப்புப் பார்வை | வாசகர் கடிதம் | Events Calendar | நூல் அறிமுகம் | கவிதைபந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
உருளைக்கிழங்கு சாதம் (ஆலூ பாத்)
பொன்னி சாதம்
- தங்கம் ராமசாமி|ஜூன் 2012|
Share:
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1/2 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம்
சிவப்பு மிளகாய் - 8
மிளகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 துண்டு
முந்திரிப் பருப்பு - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு
சாம்பார் வடகம் - சிறிதளவு
எண்ணெய் - சிறிதளவு
சாதம் (வடித்தது) - 2 கிண்ணம்
செய்முறை
சாதம் வடித்து உதிராக வைக்கவும். துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய், மிளகு, பெருங்காயம், முந்திரி எல்லாவற்றையும் சிறிது எண்ணெய் விட்டுச் சிவக்க வறுக்கவும். தேங்காய்த் துருவலையும் சிறிது வறுத்துக் கொண்டு, தேவையான அளவு உப்புச் சேர்த்து மிக்ஸியில் பொடி செய்யவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு தாளித்து கறிவேப்பிலைப் பொடியும் போட்டு வறுத்துக் கொள்ளவும். வடித்து வைத்துள்ள சாதத்துடன் பொடிகள், தாளித்தவை எல்லாம் போட்டு நன்றாகக் கலந்து கொள்ளவும். வடகத்தை வறுத்து மேலாகப் போட்டுச் சாப்பிடலாம். மிகவும் சுவையான ஒரு சாதம் இது. மேலாக மீதமுள்ள முந்திரியை வறுத்துப் போட்டுக் கொண்டால் சூப்பர் சுவை!

தங்கம் ராமசாமி,
பிரிட்ஜ்வாடர், நியூ ஜெர்சி
More

உருளைக்கிழங்கு சாதம் (ஆலூ பாத்)
Share: 




© Copyright 2020 Tamilonline