Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2001 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | அமெரிக்க அனுபவம் | சிறுகதை | கலி காலம் | பொது | சமயம்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
காய்கறி வறுவல்
சீரகம் சாதம்
வெஜிடபிள் சால்னா
அப்பளம் சாதம்
நவரத்ன குருமா
காலி·பிளவர் மஞ்சூரியன்
புதினா புலவு
கோஸ் சாதம்
- சரஸ்வதி தியாகராஜன்|ஜூலை 2001|
Share:
தேவையான பொருட்கள்

துருவிய கோஸ் - 2 கோப்பை
பாசுமதி அரிசி - 1 கோப்பை
தேங்காய்த் துருவல் - 1/4 கோப்பை
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பூண்டு - 4 பல்
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை - 2 ஆர்க்கு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 10
கொத்தமல்லித் தழை - 1/4 கோப்பை (பொடியாக நறுக்கியது)
செய்முறை

தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

அரிசியைக் கழுவி நன்கு சுத்தம் செய்து இரண்டு கோப்பை தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து வடித்துத் தனியே வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் அரை தேக்கரண்டி எண்ணெ யைச் சூடாக்கி முந்திரிப்பருப்புகளை பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியே வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றிச் சூடாக்கி உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை , துருவிய கோஸ் போட்டு நன்கு பச்சை வாசனை போகும் வரை சில நிமிடங்கள் வதக்கவும்.

அரைத்து வைத்துள்ள விழுதை அத்துடன் சேர்த்து வதக்கவும். வடித்து வைத்துள்ள சாதத்தை அத்துடன் சேர்க்கவும்.

சாதத்தை கோஸ் கலவையுடன் நன்கு கலக்கவும். வறுத்த முந்திரிப்பருப்பு, நறுக்கிய கொத்த மல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

சரஸ்வதி தியாகராஜன், அட்லாண்டா
More

காய்கறி வறுவல்
சீரகம் சாதம்
வெஜிடபிள் சால்னா
அப்பளம் சாதம்
நவரத்ன குருமா
காலி·பிளவர் மஞ்சூரியன்
புதினா புலவு
Share: 




© Copyright 2020 Tamilonline