Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | தமிழக அரசியல் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வாசகர் கடிதம் | பொது | கவிதைப்பந்தல் | சமயம்
Tamil Unicode / English Search
கவிதைப்பந்தல்
தாய்மை
- சித்ரா முரளி|மே 2002|
Share:
அம்புலியின் அழகைக் கண்டு
ஆர்ப்பரிக்கும் அலைகளே!
ஆதவனைக் கண்ட உடன்
அடங்கி நீ போவதேன்?

மதியின் வருகை நோக்கிப்
பாடும் பறவைகளே!
கதிரின் ஒளியில் நீ
வாய் மூடுவதேன்?

படிக்க நானும் அமர்ந்து
விட்டால் இயற்கையே!
பாழாய்ப் போன தூக்கம்
உடன் வருவதேன்?

மெய் தனக்கு கொடுத்த
உயிரை - கடவுள்!
மீண்டும் தாவென்று நீ
கேட்பாயே அதேன்?
பாடம் நடத்தி பிச்சை
போடும் ஆசிரியரே!
பரிட்சையின் பெயரில் மீண்டும்
அதைக் கேட்பதேன்?

உயிர் பொருள் கொடுத்து
வளர்த்த தந்தையே!
உம் பெயரை இனிஷியலாய்
சேர்க்க எதிர்பார்ப்பதேன்?

உதிரம் தன்னை பாலாய்
ஊட்டும் அன்னையே!
கைமாறு பெறாமல் நீ
மட்டும் மடிவதேன்?

சித்ரா முரளி
Share: 




© Copyright 2020 Tamilonline