Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்
கவிதைப்பந்தல் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
கவிதைப்பந்தல்
மகளிர்தினக் கவிதை: உறக்கம்
மகளிர்தினக் கவிதை: பெண் எனும் நான்
- நளினி|மார்ச் 2016|
Share:
மெல்லிய மலரல்ல
புயல் கொண்டுபோக;
ஆழமாய்ப் பதிந்திட்ட
ஆணிவேர் நான்!

குளிர்தவழும் மதியல்ல
கருமேகம் சூழ;
நெருப்பினை இறகாக்கும்
ஆதவன் ஆர்கதிர் நான்!

கூட்டுக்குள் குயிலல்ல
இசைபாடி அடங்க;
தீதினைக் கிழிக்கும்
வெறிகொண்ட பறவை நான்!

வண்ணச் சிதறலாய்
கலையும் வானவில்லல்ல,
தடைபல தகர்க்கும்
கூரிய மின்னல் நான்!
புவியியக்கும் விசை அறியும்
ஈடில்லாத் திறன் எனக்கு,
பல்கலை அனைத்தும்
களம்கண்ட வெற்றிச்செருக்கு!

எதனிலும் சரிபாதி நான்,
பல்லுயிர்ப் பாலமும் நான்,
ஊனொடு மெய்ப்பொருள் நான்,
சர்வமும் பெண் எனும் நான்!

நளினி,
மில்வாக்கி, விஸ்கான்சின்
More

மகளிர்தினக் கவிதை: உறக்கம்
Share: 




© Copyright 2020 Tamilonline