| பூல்கோபிர் டால்னா 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
	|  | 
											
												| தேவையான பொருட்கள் சீரகம் - 50 கிராம்
 சிகப்பு மிளகாய் - 5
 கண்டந்திப்பிலி - 10 கிராம்
 சதகுப்பை - 5 கிராம்
 அரிசித் திப்பிலி - 5 கிராம்
 சுக்கு - 5 கிராம்
 துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
 தக்காளி - 100 கிராம்
 கொத்துமல்லி விதை - 5 கிராம்
 மிளகு - 5 கிராம்
 லவங்கப்பட்டை - 1 துண்டு
 புளி - சிறிதளவு
 எலுமிச்சை - 1
 தேங்காய் - 3 துண்டு
 பெருங்காயம் - சிறிதளவு
 வேகவைத்த பருப்பு - 1/2 கிண்ணம்
 உப்பு - தேவைக்கேற்ப
 மஞ்சள்தூள் - தேவைக்கேற்ப
 
 செய்முறை
 தக்காளி, புளி, உப்பு, வெந்த பருப்பு, மஞ்சள்தூள் தவிர மற்றப் பொருட்களை தனித்தனியாக வறுத்தெடுக்கவும். வறுத்ததை விழுதுபோல் அரைக்கவும். போதிய நீரில் புளியைக் கரைத்து சக்கையை எடுத்துவிட்டு புளி நீரில் அரைத்த விழுது சேர்த்து இரண்டு தேக்கரண்டி மஞ்சள்பொடி, உப்பு, தக்காளி சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். ஒரு கிண்ணம் நீர் விட்டு வெந்த பருப்பைப் போட்டு மஞ்சள் நூல் போல் வந்தவுடன் இறக்கவும். இறக்கிய பிறகு நெய்யில் கடுகு, கறிவேப்பிலை, கொத்துமல்லி தாளிக்கவும். இந்த ரசம் வாயுவிற்கும், கடுப்பு வலிக்கும் நல்லது.
 | 
											
												|  | 
											
											
												| வசந்தா வீரராகவன், சான் ஹோஸே, கலிஃபோர்னியா
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 பூல்கோபிர் டால்னா
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |