Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பொது
ஹரிவராசனம் விருது
விஷ்ணுபுரம் விருது
- |ஜனவரி 2021|
Share:
அரசுசார் அமைப்புகளாலும் கல்வித்துறையாலும் கௌரவிக்கப்படாத மூத்த படைப்பாளிகளைக் கௌரவிக்கும் வகையில் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் நண்பர்களால் 2010ல் ஆரம்பிக்கப்பட்டது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம். இது ஆண்டுதோறும் தகுதிவாய்ந்த படைப்பாளிகளைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது. இதுவரை ஆ. மாதவன், பூமணி, தேவதேவன், தெளிவத்தை ஜோசப், ஞானக்கூத்தன், தேவதச்சன், வண்ணதாசன், சீ. முத்துசாமி, ராஜ் கௌதமன், கவிஞர் அபி போன்றோர் விஷ்ணுபுரம் இலக்கிய விருது பெற்றுள்ளனர். 2020ஆம் ஆண்டுக்கான விருது எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பரிசு பெறுபவர் குறித்த ஆவணப்படத்துடன் அவரது வாழ்க்கை, படைப்பு பற்றிய புத்தகங்களும் விருது விழாவின் போது வெளியிடப்படுவது ஒரு சிறப்பு. 'நடன மங்கை', 'அவரவர் வழி', 'நானும் ஒருவன்', 'மாபெரும் சூதாட்டம்', 'இடப்பக்க மூக்குத்தி', 'நள்ளிரவில் சூரியன்', 'பின் நவீனத்துவவாதியின் மனைவி', 'பின்னணிப் பாடகர்' போன்றவை சுரேஷ்குமாரின் சிறுகதைத் தொகுப்புகளாகும். 'கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்', 'அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்' - இவரது நாவல்கள். சுரேஷ்குமார இந்திரஜித் பெறும் முதல் இலக்கிய விருது இது என்பது குறிப்பிடத்தக்கது. விருது ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமும், கேடயமும், கொண்டது.
விருதாளருக்குத் தென்றலின் வாழ்த்துகள்!
More

ஹரிவராசனம் விருது
Share: 




© Copyright 2020 Tamilonline