| ஆளுக்கொரு ஐட்டம் இனிப்பு சப்பாத்தி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| இது பேச்சிலர் (அதாங்க, கல்யாணம் ஆகாதவங்க) செய்வதற்கான அவசரடிச் சமையல் ஐட்டம். ஆற அமரச் செய்து சாப்பிட்டாலும் நல்லாத்தான் இருக்கும். 
 தேவையான பொருட்கள்
 பாசுமதி அரிசி –  1  கிண்ணம்
 எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
 பச்சை மிளகாய் (நீளவாக்கில் நறுக்கியது) - 2
 லவங்கம் – 1
 பட்டை - 1 அங்குலம்
 சோம்பு - 2 டீஸ்பூன்
 வெங்காயம் (நீளவாக்கில் நறுக்கியது) – 1/2 கிண்ணம்
 தக்காளி  பேஸ்ட் – 4  மேசைக்கரண்டி
 இஞ்சி பூண்டு விழுது -  2 தேக்கரண்டி
 புதினா (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு
 கொத்துமல்லி (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு
 உப்பு - தேவைக்கேற்ப
 
 செய்முறை
 அரிசியைக் கழுவி 2 கிண்ணம் தண்ணீரில் 30 நிமிடம் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெயைக் காய வைத்து, பச்சை மிளகாய், லவங்கம், பட்டை, சோம்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக மாறியதும் தக்காளி பேஸ்ட், இஞ்சி பூண்டு விழுது, புதினா, கொத்துமல்லி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.  ஊறவைத்த அரிசி (தண்ணீருடன்) போட்டு, உப்பு கலந்து மூடவும். இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்.
 | 
											
												|  | 
											
											
												| நித்யா நவீன், சான் ஹோசே, கலிஃபோர்னியா
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 ஆளுக்கொரு ஐட்டம்
 இனிப்பு சப்பாத்தி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |