Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | நூல் அறிமுகம் | பொது
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | அஞ்சலி | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
வாசகர் கடிதம்
ஜூன் 2013: வாசகர் கடிதம்
- |ஜூன் 2013|
Share:
மே மாதத் தென்றல் அருமையாக இருந்தது. தென்றல் விளம்பரங்கள், நிகழ்ச்சி விபரங்கள் யாவும் எனக்கு மிகுந்த உபயோகமாக உள்ளன. தென்றல் வந்தவுடனே முதலில் நான் படிப்பது 'தென்றல் பேசுகிறது’தான்.

இந்த இதழில்என்ன இருக்கிறது, என்ன எதிர்பார்க்கலாம் என்பன போன்ற விஷயங்களும், இந்தியா, அமெரிக்கா மற்ற நாடுகளின் நடப்பு விஷயங்களைச் சுருக்கமாகவும், தெளிவாகவும் விவரித்து விடுவதால்,

முதலில் நான் அதைப் படிக்கிறேன்.

வயது எத்தனை என்பது முக்கியம் இல்லை, நம்முடைய குறிக்கோள் அதற்கான தளராத முயற்சி எடுத்துச் சந்தோஷமாகச் செய்தாலே சாதனை படைக்க முடியும் என்பதற்கு ஒரு சான்று ராணி ராமஸ்வாமியின்

நேர்காணல். அடுத்த மாத நேர்காணலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்.

எழுத்தாளர்களைப் பற்றிய அறிமுகத்துடன், அவர்தம் படைப்புக்களையும் கொடுத்து, அவர்களைத் தெரிந்துகொள்ள வைக்கும் தென்றலின் வழியே தனிவழி. அந்த வரிசையில் பெருமாள் முருகனின் 'கோம்பை சுவர்’

எழுத்துநடை, மொழிநடை மறக்கமுடியாதது. உமாசந்திரன் கதைகள் எனக்கு மிகப் பிடித்தவை. அவர் மகன்தான் நடராஜ் ஐ.பி.எ.ஸ். என்பதைத் தென்றல் நேர்காணல் மூலம்தான் தெரிந்து கொண்டேன். நடராஜ்

அவர்கள் வீரப்பனைப் பிடிப்பதில் சந்தித்த சவால்களையும் கடினமான செயல்பாடுகளையும் கேட்கச் சுவையாக இருந்தது. எழுத்தாலும் பேச்சாலும் தமிழுக்கு வழிகண்ட முன்னோடி ரா.பி. சேதுப்பிள்ளையைப் பற்றிய

குறிப்புக்கள் முக்கியமானவை. அபர்ணா பாஸ்கரின் 'பாலிகை’ மனதை வருடிய தூரிகையானது.

சந்தானம் அவர்களின் 'உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்' படித்தேன். ஊகூம்....இன்றுவரை குழப்பமாகவே உள்ளது. பதில் சொல்ல முடியவில்லை. இளம் சாதனையாளர் வினித்ரா சுவாமிக்குப் பாராட்டுகள்.

சசிரேகா சம்பத்குமார்,
யூனியன் சிடி, கலிஃபோர்னியா.

*****
'தென்றல்’ ஒரு சூப்பர் படைப்பு. அட்டையிலிருந்து கடைசிவரை எல்லாமே சூப்பர். அமெரிக்க வாழ்க்கைபோல் ஓர் ஒழுங்குடன் தகவல்கள், தலையங்கம், கவிதைகள், கட்டுரைகள், கதைகள், நேர்காணல்கள்,

நிகழ்வுகள், விமர்சனங்கள் எல்லாமே சுவைபட அமைந்து ஒரு நல்ல வாசிப்பை, அறிவு வளத்தைத் தருகிறது.

கே.ஆர். பாலகிருஷ்ணன்,
கேரல்டன், டெக்சாஸ்

*****
Share: 




© Copyright 2020 Tamilonline