Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | எங்கள் வீட்டில் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
குதிரைக்கு மட்டுமல்ல கொள்ளு
கொள்ளு இட்லிப் பொடி
கொள்ளு குருமா
- நித்யா பாலாஜி|நவம்பர் 2010|
Share:
தேவையான பொருட்கள்
முளை கட்டிய கொள்ளு - 1 1/2 கிண்ணம்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
பிரிஞ்சி இலை - 1
சோம்பு - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
தனியாத் தூள் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் (துருவியது) - 1/4 தேக்கரண்டி
முந்திரி - 4
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கொத்துமல்லித் தழை (நறுக்கியது) - 1/4 கிண்ணம்

செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, சூடான பின் பிரிஞ்சி இலை, சோம்பு போடவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிப் போட்டு நன்றாக வதக்கவும். வதக்கிய பொருட்களுடன் மஞ்சள் தூள், தனியா பொடி மற்றும் கரம்மசாலா போட்டு நன்றாகப் பிரட்டவும். ஒரு கிண்ணம் தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு மஞ்சள் தூளின் பச்சை வாசம் போகும்வரை நன்றாகக் கொதிக்க வைக்கவும். கொதித்த பின்பு வேகவைத்த முளைகட்டிய கொள்ளை அத்துடன் சேர்க்கவும். ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும். தேங்காய் மற்றும் முந்திரியை அரைத்துச் சேர்க்கவும். குருமா சேர்த்து வரும்பொழுது கொத்துமல்லித் தழை தூவி இறக்கவும். இந்தச் சத்தான, சுவையான கொள்ளு குருமாவை, சப்பாத்தி, பூரி, பரோட்டா, நான் என்று எந்தவகை இந்திய பிரெட்டுடனும் சாப்பிடலாம்.
நித்யா பாலாஜி,
பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்சி
More

குதிரைக்கு மட்டுமல்ல கொள்ளு
கொள்ளு இட்லிப் பொடி
Share: 




© Copyright 2020 Tamilonline