Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | பயணம் | சிரிக்க சிரிக்க | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
கவிதைப்பந்தல்
ஓயட்டும் போர்கள்
அளவுக்கு மிஞ்சினால்...
- வசந்தா சுந்தரராஜன்|மார்ச் 2007||(3 Comments)
Share:
Click Here Enlargeஉணவு அளவோடு உண்டால் ஆரோக்கியம்
அளவு மீறினால் அஜீரணம்
அளவுக்கு அதிகமானால் விஷம்தான்!

உடை அளவாய் உடுத்தினால் அழகு
அளவு குறைந்தால் அசிங்கம்
அரைகுறையானால் ஆபாசம்!

காற்று அளவாய் வீசினால் தென்றல்
அளவு அதிகமானால் புயல்
அளவை மீறினால் சூறாவளி!

கடல் அலைகள் அளவாய் இருந்தால் மியாமி
அதிகரித்தால் பெளர்ணமி
அளவைமீறி ஆர்ப்பரித்தால் சுனாமி!

நெருப்பு அளவாய் எரிந்தால் தீப ஒளி
அதிகம் எரிந்தால் தீப்பந்தம்
அளவை மீறினால் காட்டுத் தீ!

தானம் கொடுக்க மறுத்தால் கருமி
அதிகம் கொடுப்பவன் தருமி
பிறர் சொத்தைத் தன் பேரில் எடுத்தால் பினாமி!

எதையும் சுருக்கமாய்ச் சொன்னால் ஜோர்
சிரிப்பாகச் சொன்னால் ஒன்ஸ் மோர்
அடிக்கடி சொன்னால் போர்!
வசந்தா சுந்தரராஜன்
More

ஓயட்டும் போர்கள்
Share: 




© Copyright 2020 Tamilonline