Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2023 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | அஞ்சலி | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர்கடிதம் | முன்னோடி | சிறப்புப்பார்வை | பொது
Tamil Unicode / English Search
சின்னக்கதை
தர்ம போதனை - ஒரு மகாத்மாவின் உண்மையான தர்மம்
- |மே 2023|
Share:
சமர்த்த ராமதாசர் சிவாஜியின் முன் தோன்றி வழக்கம்போல "பவதி பிக்ஷாம் தேஹி" என்று கூறினார். குருவே கடவுள் என்பதை சிவாஜி உணர்ந்திருந்தார்; ஒரு காகிதத்தில் எதையோ எழுதி, ராமதாசரின் பையில் மரியாதையுடன் வைத்தார். பசியைப் போக்க, ஒரு காகிதம் எப்படிப் போதும்?" என்று ராமதாசர் கேட்டார். சிவாஜி அதைப் படிக்கும்படி வேண்டினார். முழு ராஜ்யத்தையும் தனக்குச் சொந்தமான அனைத்தையும் சிவாஜி குருவுக்கு அன்பளிப்பாக அதில் எழுதியிருந்தது.

சமர்த்த ராமதாசர், "இல்லை, எனது தர்மம் தர்ம போதனை, அதாவது மக்களுக்குச் சரியான வாழ்க்கை முறையை அறிவுறுத்துவதுதான். உங்களைப் போன்ற க்ஷத்திரியர்கள் (போர் வீரர்கள்) நாட்டை ஆளும் தர்மத்தைப் பின்பற்ற வேண்டும், உங்கள் பாதுகாப்பில் இருக்கும் கோடிக் கணக்கானவர்களுக்கு அமைதியும் திருப்தியும் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும்." என்று கூறினார்.

யாக்ஞவல்கியரும் ஒருமுறை ராஜ்யத்தை மறுத்தார், ஏனென்றால் அவர் சுதந்திரத்தின் சாம்ராஜ்யமான மோட்சத்தின் மீது அதிக அக்கறை கொண்டிருந்தார். வசிஷ்டர், ராமர் வழங்கிய ஒரு ராஜ்யத்தைத் துறந்ததாகவும் கூறப்படுகிறது.
பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா
Share: 




© Copyright 2020 Tamilonline