Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2023 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர்கடிதம் | நூல் அறிமுகம்
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
ஃப்ளோரிடா: கவியரங்கம்
- சுசீலா மாணிக்கம்|ஏப்ரல் 2023|
Share:
ஃபிப்ரவரி 19, 23 அன்று, கவிஞர் அறிவுமதி தலைமையில் இணையவழிக் கவியரங்கம் ஒன்றை ஃப்ளோரிடா பன்னாட்டுப் பல்கலைக் கழகத்தின் தமிழ் மற்றும் புலம்பெயர் தமிழர் ஆய்வு நிறுவன முன்முயற்சி நடத்தியது. இந்த அமைப்பின் நிறுவனர் கலைமதி கவியரங்கத்தைத் தொடங்கி வைத்தார். கலைமாமணி சிக்கில் குருசரண் அவர்களின் சீடர் சஞ்சனா குமாரி "நிலைபெற நீ வாழியவே" என இன்குரலில் வாழ்த்துப் பாடினார்.



மலேசியக் கவிஞர் சீனி நைனா முகமது, டெய்சி ஜெயபிரகாஷ் (கலிஃபோர்னியா), வஞ்சி கோவிந்த் (டெக்சஸ்), கவிதா பாரதிராஜா (தமிழ்நாடு), அழகப்பன் அண்ணாமலை (கலிஃபோர்னியா), மகேஸ்வரி (தமிழ்நாடு), பாரதிராஜா ராமச்சந்திரபோஸ் (கலிஃபோர்னியா), கலையரசி முருகேசன் (ம்யூனிக், ஜெர்மனி) ஆகியோர் இந்தக் கவியரங்கத்தில் அருமையான கவிதைகளை வழங்கினர்.

இந்துமதி மற்றும் பாலா கண்ணன் ஆகியோர் கவியரங்கத்தை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்து நடத்தினர்.
சுசீலா மாணிக்கம்,
சென்னை, தமிழ்நாடு
Share: 




© Copyright 2020 Tamilonline