Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | கவிதைபந்தல் | முன்னோடி | அனுபவம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
மாதா அமிர்தானந்தமயி அமெரிக்கா விஜயம்
BATCC: சங்கமம் 2016 திருவிழா
சிகாகோ: குழந்தைகள் தினவிழா
மைத்ரி நாட்யாலயா: 'கஜானனீயம்'
அரங்கேற்றம்: சங்கவி குப்புசாமி
சான் அன்டோனியோ: படகுத் திருவிழாவும் தீபாவளித் திருவிழாவும்
டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ்: தீபாவளிக் கொண்டாட்டம்
அரங்கேற்றம்: ஸ்ரீதேவி ஜெயராமன்
டெக்சஸ்: தமிழ் ஆசிரியர் பயிற்சி முகாம்
டெக்சஸ்-ஆலன்: இளந்தளிர் விழா
TNF: ஃபிலடெல்பியா ஈகை விழா
வ.சுப. மாணிக்கனார் நூற்றாண்டு விழா
- நெல்லிக்கனி அழகப்பன்|டிசம்பர் 2016|
Share:
வ.சுப. மாணிக்கனார் நூற்றாண்டு விழாவை ஏப்ரல் 17, 2016 தொடங்கி உலகத்தமிழ் இயக்கங்களும், பல்கலைக்கழகங்களும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றன.

உலகத்தமிழ் அறக்கட்டளை அமைப்பின் சார்பில் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்கள் மகன் பொறிஞர். தமிழ்மணிகண்டன் முயற்சியால் நவம்பர் 19, 2016 அன்று அமெரிக்காவில் மேரிலாண்டு மாகாணத்தில் ஹாலிடே இன் வளாகத்தில் இவ்விழா சிறப்புற நடைபெற்றது.

பன்னாட்டுப் புறநானூற்றுக் குழுத்தலைவர் முனைவர். பிரபாகரன் தலைமை வகித்தார். வ.சுப.வின் மாணவரும் தொழிலதிபரும் கல்வியாளருமான பழனி. ஜி. பெரியசாமி அவர்கள் முன்னிலையில் தொடங்கிய விழாவில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் முன்னாள் தலைவர் நாஞ்சில் பீட்டர், வாஷிங்டன் தமிழ்ச்சங்கத் தலைவர் பரிவிளாகம். சா. பார்த்தசாரதி, துணைத்தலைவர் குழந்தை இராமசாமி, முன்னாள் தலைவர் பாலகன் ஆறுமுகசாமி, மருத்துவர் சோம இளங்கோவன், முனைவர் வா.மு.சே. ஆண்டவர் ஆகியோர் உரையாற்றினர். வ.சுப.வின் மகள் தென்றல் அழகப்பன் நெகிழ்வுரையாற்றினார். வா.மு.சே.வின் புதல்வர்கள் ஆண்டவர் மற்றும் தமிழ்மணிகண்டன் எழுதிய 'வ.சுப. எனும் தமிழ்க்கடல்' நூல் நூற்றாண்டு விழா சிறப்பு வெளியீடாக வெளியானது.

வ.சுப.வின் தமிழ்த்தொண்டு, ஈகை, தற்சிந்தனைகள், நிர்வாகத்திறன், தனிமனித ஒழுக்கம் போன்ற தலைப்புகளில் கருத்தரங்கமும் உரையரங்கமும் நடைபெற்றன. திரு. அரசு செல்லையா, திரு. துரைக்கண்ணன் சுந்தரக்கண்ணன், திரு. சோமலெ. சோமசுந்தரம், திரு. ஞானசேகரன் இராசமாணிக்கம், திரு. மகேந்திரன் பெரியசாமி, திரு. சுப்பிரமணிய முனியசாமி, திரு. பஞ்சாட்சரம் வைத்தியலிங்கம், நெல்லிக்கனி அழகப்பன் ஆகியோர் உரையாற்றினர். மாணிக்கனாரின் தமிழ்க்கல்வி என்னும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. பள்ளிக்குழந்தைகள் திருக்குறளும் மாணிக்கக்குறளும் ஒப்புவித்தனர்.
நெல்லிக்கனி அழகப்பன்,
மேரிலாண்டு
More

மாதா அமிர்தானந்தமயி அமெரிக்கா விஜயம்
BATCC: சங்கமம் 2016 திருவிழா
சிகாகோ: குழந்தைகள் தினவிழா
மைத்ரி நாட்யாலயா: 'கஜானனீயம்'
அரங்கேற்றம்: சங்கவி குப்புசாமி
சான் அன்டோனியோ: படகுத் திருவிழாவும் தீபாவளித் திருவிழாவும்
டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ்: தீபாவளிக் கொண்டாட்டம்
அரங்கேற்றம்: ஸ்ரீதேவி ஜெயராமன்
டெக்சஸ்: தமிழ் ஆசிரியர் பயிற்சி முகாம்
டெக்சஸ்-ஆலன்: இளந்தளிர் விழா
TNF: ஃபிலடெல்பியா ஈகை விழா
Share: 




© Copyright 2020 Tamilonline