Home | Advertise | About Us
Current Issue
Previous Issues
Author Index
Category Index
தென்றல் சிறுகதை போட்டி
சிறுகதை போட்டி பரிசுத் தேர்வுகள்

தென்றல் சிறுகதைப் போட்டி வட அமெரிக்கச் சிறுகதை எழுத்தாளர்களுக்கு ஒரு வாய்ப்பு, ஒரு சவால்.

புலம்பெயர்ந்து வந்துவிட்ட தமிழனுக்கு ஒருபுறம் தமிழின் மீது அடங்காத ஆசை, மறுபுறம் தயக்கம். தமிழ் பேசுவதில்லை, அதிகம் படிப்பதில்லை, தமிழ்நாட்டுப் பத்திரிக்கைகளே தமிலீஷில் எழுதுகின்றன. ஒரு நல்ல கதையைத் தென்றலில் படித்ததும் 'நான் இதை எழுதியிருப்பேனே' என்று தோன்றுகிறது. ஆனால் எழுதி அனுப்பத் தயக்கம், எங்கே மறுக்கப்படுமோ என்று.

போட்டி என்றால் ஏராளமான பேர் எழுதுவார்கள், அதில் நானும் முகம் தெரியாத ஒருவனாகக் கலந்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது. இந்தப் பெயரிலித் தன்மை எழுதத் துணிச்சலைக் கொடுக்கிறது. அதுவரை தென்றலுக்கு எழுதாதவர்கள் கையில் பேனாவை, இல்லை, விசைப்பலகையை எடுக்கிறார்கள். சிலர் ஒரு கதைக்கு மேலும் அனுப்பி யிருந்தனர். வழக்கம்போல நகைச்சுவைக் கதைகள் குறைவாகவே இருந்தன.

மொத்தம் 35 சிறுகதைகள் வந்திருந்தன. எத்தனை கருக்கள், கருத்துக்கள்! சுவையான நடைகள்; வாழ்வைக் கண்முன் கொண்டு நிறுத்தும் கற்பனைகள்.

ஆனால் யதார்த்தத்தைப் பளீரென்று சொல்லி, சற்றே மனித வாழ்க்கையின் அபூர்வத்தை, அற்புதத்தை - ஏன், சில சமயம் குரூரத்தை - தொட்டுக் காட்டும் கதைகள் கவனத்தை ஈர்க்கின்றன. கதைக்கரு, நடை என்று வெவ்வேறு அம்சங்களின் சிறப்புகளைக் கருத்தில் கொண்டே இறுதிச் சுற்றுக் கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. பரிசு பெற்ற கதைகள் இவ்விதத்தில் சற்றே உயரத்தில் இருப்பதைப் பார்க்கலாம். இதோ பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவை:

1. தீவிரவாதி - ம.சீத்தாராமன், டிராய், மிச்சிகன்
2. அர்த்தங்கள் மாறும் - மோகன், ஹூஸ்டன், டெக்ஸாஸ்
3. நாராயணன் என்னும் நாணம் - சேகர், பார்ட்லெட், இல்லினாய்ஸ்

பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிற கதைகளின் பட்டியல் அடுத்த இதழில் வெளியாகும்.

போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.

***********

தென்றல் சிறுகதைப் போட்டி 2009
***********

சிறுகதை மலர் 2007