| தேவையான பொருட்கள் : 
 கடலைப் பருப்பு - 250 கிராம்
 வெல்லம் - 200 கிராம்
 தேங்காய் - 1 மூடி
 ஏலக்காய் - 4
 
 செய்முறை :
 
 கடலைப்பருப்பை அரைமணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
 
 தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
 
 ஊறிய கடலைப் பருப்பை தண்ணீரில் வேக வைக்கவும். பருப்பு நன்றாக வெந்தவுடன் தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியிலிட்டு லேசாக மசித்துக் கொள்ளவும். மாவாகவும் இல்லாமல் முழு பருப்பாகவும் இல்லாமல் மசித்துக் கொள்ள வேண்டும்.
 
 தேங்காய்ப் பூரணம் தயார் செய்தது போலவே இந்தப் பூரணத்தையும் தயாரித்துக் கொண்டு கொழுக்கட்டை செய்ய வேண்டியது தான்.
 
 நளாயினி
 |