| தேவையான பொருட்கள் 
 ரவை		-	1/2 கிண்ணம்
 சர்க்கரை		-	2 கிண்ணம்
 பாதாம் பருப்பு	-	10
 பால்		-	1 கிண்ணம்
 தேங்காய்த் துருவல்	-	1/2 கிண்ணம்
 நெய்		-	1 கிண்ணம்
 கேசரித் தூள்		-	சிறிதளவு
 ஏலக்காய்		-	8
 முந்திரிப் பருப்பு	-	8
 பச்சைக் கற்பூரம்	-	சிறிதளவு
 
 செய்முறை
 
 ரவையைச் சிறிது வறுத்து 1 மணி நேரம் பாலில் ஊறவைத்துக் கொள்ளவும். பாதாம் பருப்பை ஊறவைத்து, தோல் உரித்துக் கொள்ளவும். இவை இரண்டுடனும் தேங்காய்த் துருவலைச் சேர்த்து மிக்சியில் மைய அரைத்துக் கொள்ளவும்.
 
 சர்க்கரையை முற்றிய பாகு வைத்துக் கொள்ளவும். அதில் அரைத்த விழுதைப் போட்டு நெய் விட்டுக் கொண்டே கைவிடாமல் கிளறிக்கொண்டு வரவும்.
 
 நன்கு சுருண்டு வரும்போது கேசரித் தூள், ஏலக்காய்ப் பொடி, வறுத்த முந்திரி, பச்சைக் கற்பூரம் ஆகியவற்றைச் சேர்த்து இறக்கினால் சூப்பர் அல்வா தயார்.
 
 தங்கம் ராமசாமி
 |