| தேவையான பொருட்கள் 
 பயறு			-	3 கிண்ணம்
 பச்சரிசி			-	1 கிண்ணம்
 பச்சை மிளகாய்		-	4
 இஞ்சி			-	2 அங்குல நீளம்
 கருவேப்பிலை, கொத்தமல்லி	-	தேவைக்கேற்ப
 பெருங்காயம்		-	சிறிதளவு
 உப்பு			-	தேவையான அளவு
 வெங்காயம் அல்லது தேங்காய் தூள்	-	தேவையானால்
 எண்ணெய்			-	1/2 கிண்ணம்
 
 செய்முறை
 
 பயறை முதல்நாளே ஊற வைக்கவும். (முளை வந்த பயறு ஆனாலும் சிறந்தது) அரிசியை 2 மணிநேரம் ஊற வைக்கவும்.
 
 அரிசி, பயறு இவற்றுடன் பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்வி, உப்பு, பெருங்காயம் இவற்றையும் சேர்த்து மிக்ஸி/கிரைண்டரில் ஓரளவு வழவழப்பாக அரைக்கவும். (இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி இவற்றை பொடியாக நறுக்கியும் போடலாம்)
 
 தோசைக் கல்லில் எண்ணெய் தடவி அடை தட்டவும்.
 
 மாவு அரைத்து 2, 3 மணி நேரம் கழித்து செய்தால் மிருதுவாக இருக்கும்.
 
 பயறுக்கு பதிலாக பயத்தம்பருப்பும் உபயோகிக்கலாம்.
 
 இந்திரா காசிநாதன்
 |