| தேவையான பொருட்கள் 
 பச்சரிசி		-	1 ஆழாக்கு
 துவரம் பருப்பு	-	1/2 ஆழாக்கு
 கடலை பருப்பு	-	1/4 ஆழாக்கு
 உளுத்தம் பருப்பு	-	1 பிடி
 மிளகாய் வற்றல்	-	4
 உப்பு		-	தேவையானது
 கருவேப்பிலை	-	சிறிதளவு
 பெருங்காயம்	-	சிறிதளவு
 எண்ணெய்		-	2 கரண்டி
 கடுகு		-	1 ஸ்பூன்
 
 செய்முறை
 
 அரிசி, பருப்பு வகைகள், மிளகாய் வற்றல் இவற்றை மிக்யில் மெல்லிய ரவா போல் பொடி செய்யவும்.
 
 வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, பெருங்காயம் பொறித்து, 3 ஆழாக்கு தண்ணீர்விட்டு தேவையான உப்பு போடவும்.
 
 தண்ணீர் கொதித்ததும் உடைத்து வைத்துள்ள ரவாவை போட்டு கைவிடாமல் 5 நிமிடங்கள் கிளறவும்.
 
 சுமாராக வெந்ததும் கீழே இறக்கி வைத்து ஆற வைக்கவும்.
 
 வாணலியில் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கிளறி வைத்த மாவை உருட்டி லேசாக தட்டி எண்ணெயில் போட்டு அதன் மேல் மேலும் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு மேலே குழிவான மூடியால் மூடவும். 5 நிமிடம் வெந்ததும் திருப்பி விட்டு வேகவிடலாம் அல்லது தட்டில் எடுத்து வைத்து விடலாம்.
 
 திருப்பிவிட்டால் இரண்டு பக்கமும் கரகரப்பாக இருக்கும்.
 
 இதைபோல் மீதி உள்ள மாவையும் தட்டி எடுத்து சூட்டுடன் சாப்பிடவும்.
 
 இந்திரா காசிநாதன்
 |