| தேவையான பொருட்கள் 
 பாசிப்பருப்பு		- 1 கிண்ணம்
 பொடித்த சர்க்கரை	- 1 கிண்ணம்
 நெய்		- 1/8 கிண்ணம்
 முந்திரிப்பருப்பு	- 1 மேசைக்கரண்டி
 திராட்சைப்		- 1 மேசைக்கரண்டி
 ஏலக்காய்ப் பொடி	- சிறிதளவு
 
 செய்முறை
 
 ஒரு வாணலியில் பருப்பைப் போட்டு பொன்னிறமாக வரும்வரை வறுக்கவும். சற்று ஆறியபின் மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடிசெய்து சலித்துக்கொள்ளவும்.
 
 இத்துடன் பொடித்த சர்க்கரை, வறுத்த திராட்சை மற்றும் முந்திரி, ஏலப்பொடி சேர்த்து கலக்கவும். நெய்யை நன்கு சூடுசெய்து இந்த மாவில் விட்டுக்கலந்து சூட்டுடன் உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.
 
 பாசிப்பருப்பு மாவு கிடைத்தால் இதைக் கடலை மாவு லாடு போலவே செய்யவும்.
 
 சரஸ்வதி தியாகராஜன்
 |