விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா): வாழும் தமிழ் இலக்கிய விழா
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) சார்பில், 2026 ஏப்ரல் 3 மற்றும் 4 தேதிகளில், நியூயார்க் நகரில் 'வாழும் தமிழ் இலக்கிய விழா' (Living Tamil LitFest) நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் ஏ. முத்துலிங்கம், ஜெயமோகன், அருண் மகிழ்நன், கே.வி. அரங்கசாமி தொடங்கி மொழிபெயர்ப்பாளர் டாமியன் சியர்ல், கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான ஜெஃப்ரி ஃப்ரோக், எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான எஸ்தர் ஆலன், மொழிபெயர்ப்பாளர்கள் கரீம் ஜேம்ஸ் அபு-சியத், பீட்டர் கான்ஸ்டன்டைன், எழுத்தாளர்கள் யுவன் சந்திரசேகர், பாவண்ணன், சு. வேணுகோபால், சுனீல் கிருஷ்ணன், அ. வெண்ணிலா, கலைச்செல்வி, கவிஞரும் எழுத்தாளருமான பெருந்தேவி, கனடாவைச் சேர்ந்த காலம் செல்வம், சிங்கப்பூரைச் சேர்ந்த கவிஞர் அழகுநிலா, மலேசியாவைச் சேர்ந்த ம. நவீன், மொழிபெயர்ப்பாளர் கல்யாணராமன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.



அபிராமி ரவிக்குமார் உள்ளிட்ட இளம் தலைமுறையினர் இந்நிகழ்வைத் தொகுத்து வழங்குகின்றனர்.

நவீன தமிழ் இலக்கியத்தை உலக அரங்கில் கொண்டு சேர்க்கும் முயற்சியான இந்த விழா, இந்திய மொழிகளில் அமெரிக்காவில் நடக்கும் முதல் பெரிய நவீன இலக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

தொடர்புக்கு இணையதளம்: livingtamillitfest.org

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com