ஜனவரி 2024: வாசகர்கடிதம்
டிசம்பர் மாதத் தென்றல் இதழில் பட்டயக் கணக்காளர், சிறந்த பாடகர், தேர்ந்த நாட்டியக் கலைஞர் எனப் பல்வேறு சிறப்புக்களையுடைய ஸ்ம்ரிதி விஸ்வநாத் அவர்களின் நேர்காணல் சிறப்பாக இருந்தது. கல்வியும், நாட்டியமும் ஒருங்கே கற்கும்போது இரண்டையும் இரு கண்களாக பாவித்து, இரண்டிலும் தேர்ச்சி பெற்று, இரண்டிலும் வலுவாக நிற்கவேண்டும் என்ற அவரின் குருவின் சொற்களைச் சீடர்கள் பின்பற்றுகிறார்கள் என்பது போற்றப்பட வேண்டியது.

'அலமாரி' பகுதியில் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் பற்றியும், 'முன்னோடி' தபிதா பாபு பற்றியும் பல விவரங்களைத் தெரிந்து கொண்டேன். தென்றலுக்கு மனமார்ந்த நன்றி.

சசிரேகா சம்பத்குமார்,
யூனியன் சிட்டி ,கலிஃபோர்னியா

© TamilOnline.com