Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | சிறப்புப் பார்வை
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | அஞ்சலி | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | முன்னோடி | சிறுகதை | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
நியூ ஜெர்சி: வள்ளலார் தமிழ்ப் பள்ளி பொங்கல் விழா
டெலவர்: தமிழர் மரபிசைக் கலை நிகழ்ச்சி
சமர்ப்பண்: ஜெயதேவ் அனிருத் கச்சேரி
அரோரா: வறியோர்க்கு உணவு
சான் மார்டின் கோவில்: பிராண ப்ரதிஷ்டை
- ஸ்ரீராம் நாகநாதன்|மார்ச் 2019|
Share:
2019 ஜனவரி 17, 18 மற்றும் 20ம் நாட்களில், தெற்கு சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் உள்ள சான் மார்டின் நகரில் வைதிக வித்யா கணபதி கோயிலில் புதிய விக்ரகங்களின் பிராண ப்ரதிஷ்டை சிறப்பாக நடைபெற்றது. 12.5 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தில் அமைந்துள்ள இக்கோவிலில் 2017ம் ஆண்டு, இதே சமயத்தில் மஹா வல்லப கணபதி விக்ரகம் முதலில் நிறுவப்பட்டது. இவ்வாண்டு ஐந்தரை அடி உயரமுள்ள சிவலிங்கம் மற்றும் பிரசன்ன வெங்கடேஸ்வர பெருமாள், சாந்த விஷ்ணு துர்கை, லலிதா மஹா திரிபுரசுந்தரி அம்மன் விக்ரகங்களும், விநாயகர், சிவ பெருமான் வாகனங்களும், நந்தியும், பலி பீடங்களும் நிறுவப்பட்டன. இவை தமிழ் நாட்டின் மாமல்லபுரத்தில் உள்ள சில்ப கலா மையத்தில் உருவாக்கப்பட்டு இங்கு கொண்டுவரப்பட்டது.

முதல் நாளான வியாழக்கிழமை அன்று பக்தர்களுக்கு ரக்ஷா பந்தனம், வாஸ்து ஹோமம், புண்ணியாகவாசனம் மற்றும் விக்ரகங்களின் கண் திறப்பு ஆகியவை நடைபெற்றன. வெள்ளிக்கிழமையன்று சாந்தி ஹோமமும் பூர்ணாஹுதியும் செய்தபின் விக்ரகங்களுக்கு அபிஷேக ஆரத்தியுடன் வழிபாடுகள் நிறைவடைந்தன.

ஞாயிற்றுக்கிழமை காலையில் கோமாதா பூஜையுடன் நிகழ்ச்சிகள் துவங்கின. தொடர்ந்து 108 கலசங்களை வைத்து சர்வதேவதா ஹோமம் வளர்த்து, கலச நீரினால் ஏகாதச ருத்ர பாராயணத்துடன் அபிஷேகம் நடத்தப்பட்டது. அன்று பௌர்ணமி தினமானதால் ஸ்ரீ சத்தியநாரயண சுவாமி பூஜையும், ஆரத்தியும் செய்த பிறகு மஹாபிரசாதம் வழங்கப்பட்டது.

ஸ்ரீ கணேஷ் சாஸ்திரி, ஸ்ரீ சிவசங்கர் சாஸ்திரி, ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி மற்றும் பக்தர்களின் உற்சாகமும் உழைப்பும் விழா மிகச்சிறப்பாக நடக்கக் காரணமாக அமைந்தன.
ஸ்ரீராம் நாகநாதன்,
சான் மார்டின், கலிஃபோர்னியா
More

நியூ ஜெர்சி: வள்ளலார் தமிழ்ப் பள்ளி பொங்கல் விழா
டெலவர்: தமிழர் மரபிசைக் கலை நிகழ்ச்சி
சமர்ப்பண்: ஜெயதேவ் அனிருத் கச்சேரி
அரோரா: வறியோர்க்கு உணவு
Share: 




© Copyright 2020 Tamilonline