Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி
சித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |
Tamil Unicode / English Search
இளந்தென்றல் - மூளைக்கு வேலை
கணிதப் புதிர்கள்
- அரவிந்த்|டிசம்பர் 2018|
Share:
1. 1, 8, 81, ..... இந்த வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?

2. அது முந்நூறுக்குள் உள்ள ஒரு மூன்று இலக்க எண். முதல் எண்ணின் சரிபாதி இரண்டாம் எண். முதல் எண்ணின் இரு மடங்குடன் இரண்டாம் எண்ணைக் கூட்ட மூன்றாம் எண் கிடைக்கும். மூன்றையும் கூட்டினால் எட்டு வரும். ஐந்தால் வகுபடக் கூடிய அந்த எண் எது?

3. ஏதேனும் இரண்டு எண்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவை எத்தனை இலக்க எண்களாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த இரண்டு எண்களையும் கூட்டுங்கள். அந்தக் கூடுதலில் பாதியையும், அந்த இரு எண்களுக்கிடையே உள்ள வித்தியாசத்தில் பாதியையும் கூட்டினால் என்ன வருகிறது? ஏன்?

4. 3 மற்றும் 7 என்ற எண்களை வகுத்தோ, பெருக்கியோ, கூட்டியோ, கழித்தோ கணிதச் சமன்பாடுகளைப் பயன்படுத்தி விடையாக 37 வரவழைக்க வேண்டும். இயலுமா?

5. ஐந்து புறாக்கள் ஐந்து கிண்ணங்களில் உள்ள தானியங்களைச் சாப்பிட ஐந்து நிமிட நேரம் எடுத்துக்கொள்கிறது. அப்படியென்றால் நூறு புறாக்கள், நூறு கிண்ணங்களில் உள்ள தானியங்களைச் சாப்பிட எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளும் ?

அரவிந்த்
விடைகள்
Share: 




© Copyright 2020 Tamilonline