Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | அஞ்சலி | சமயம் | பொது | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
அரோரா: வறியோர்க்கு உணவு
அரங்கேற்றம்: தீபிகா தங்கராஜ்
அரங்கேற்றம்: அனன்யா சுந்தர்ராகவன்
வடகரோலினா: எழுத்தாளர் ஜெயமோகனுடன் சந்திப்பு
அரங்கேற்றம்: காஷ்வி லால்குடி
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி ஐ.நா. கருத்தரங்கில் சிறப்புரை
அரங்கேற்றம்: ஸ்ருதிஸ்ரீ
FeTNA தமிழ்விழா 2015
அரங்கேற்றம்: சித்ரா லட்சுமணன்
அரங்கேற்றம்: அர்ச்சிதா ராஜகோபாலன்
கலிஃபோர்னியா: பாரதி தமிழ்ப்பள்ளி துவக்க விழா
சிகாகோ-விபா: குழந்தைகளுக்குச் சத்துணவு
மிச்சிகன் தமிழ்ச்சங்கம்: 40வது ஆண்டுவிழா
ஆண்டுவிழா: சிமி வேல்லி தமிழ்ப்பள்ளி
- ரெ.சண்முகசுந்தரம்|ஆகஸ்டு 2015|
Share:
மே 17, 2015 அன்று சிமி வேல்லி தமிழ்ப்பள்ளியின் மூன்றாவது ஆண்டுவிழா, அட்வென்டிஸ்ட் பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. முதல்வர் திருமதி. சுபாஷிணி ரங்கநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார். பின்னர், பள்ளி மாணவியர் 'வாழ்க தமிழ்' என்ற பாடலுக்கு பாரதநாட்டியம் ஆடினர். ஓய்வுபெற்ற புவியியல் விஞ்ஞானி திரு. தி.நா. பார்த்தசாரதி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்புரையாற்றி மாணவர்களுக்குப் பட்டமளித்தார். தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று நடைபெற்ற திருக்குறள் போட்டிகளில் வென்றோருக்கும், முழு வருகைப்பதிவு கொண்டோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

பிறகு கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. திருமதி. சக்தி அருள்மணி வகுப்பு மாணவர்கள், சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப்பற்றி மூவேந்தர்களே விளக்குவதாக ஒரு தொகுப்பு வழங்கினார்கள். திருமதி. ஜெயஸ்ரீ கல்யாண் வகுப்பு மாணவர்கள், அமெரிக்காவாழ் தமிழர் நடுவே தமிழின் நிலையை ஒரு நாடகத்தின் வாயிலாக விளக்கினார்கள். திரு. மு. நாச்சியப்பன் வகுப்பு மழலைகள் பாடல்களை இசைத்து நெஞ்சைக் கொள்ளை கொண்டனர்.
திரு. ரெ. சண்முகசுந்தரம் வகுப்பு மாணவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை 'ஆழிப் பேரலையிலும் அசையாத இந்தியா' என்ற நாடகத்தின் மூலமாக வெளிப்படுத்தினார்கள். திருமதி. த. வித்யாலக்ஷ்மி வகுப்பு மாணவர்கள் பாரம்பரிய கிராமிய நடனம் ஆடி மகிழ்வித்தனர். திருமதி. மகாலட்சுமி ஆல்வின் வகுப்பு மாணவர்கள் மகாகவி பாரதியாரின் கவிதைகளைக் கூறினார்கள். திருமதி. காந்திமதி திருமூர்த்தி வகுப்பு மாணவர்கள் தமிழின் சிறப்பையும், அமெரிக்கத் தமிழ்க் குழந்தைகள் ஏன் தமிழ் கற்கவேண்டும் என்பதையும் தெருக்கூத்து வாயிலாக விளக்கினார்கள்.

துணைமுதல்வரும் பொருளாளருமான திருமதி. நிர்மலா விஜயரங்கம் பள்ளியின் நிதியறிக்கையை வழங்கினார். நிர்வாக அலுவலர் திரு. யோகானந்த் கந்தசாமி நன்றியுரை வழங்கினார். தேசியகீதத்துடன் விழா நிறைவடைந்தது.

ரெ.சண்முகசுந்தரம்,
சிமி வேல்லி, கலிஃபோர்னியா
More

அரோரா: வறியோர்க்கு உணவு
அரங்கேற்றம்: தீபிகா தங்கராஜ்
அரங்கேற்றம்: அனன்யா சுந்தர்ராகவன்
வடகரோலினா: எழுத்தாளர் ஜெயமோகனுடன் சந்திப்பு
அரங்கேற்றம்: காஷ்வி லால்குடி
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி ஐ.நா. கருத்தரங்கில் சிறப்புரை
அரங்கேற்றம்: ஸ்ருதிஸ்ரீ
FeTNA தமிழ்விழா 2015
அரங்கேற்றம்: சித்ரா லட்சுமணன்
அரங்கேற்றம்: அர்ச்சிதா ராஜகோபாலன்
கலிஃபோர்னியா: பாரதி தமிழ்ப்பள்ளி துவக்க விழா
சிகாகோ-விபா: குழந்தைகளுக்குச் சத்துணவு
மிச்சிகன் தமிழ்ச்சங்கம்: 40வது ஆண்டுவிழா
Share: 




© Copyright 2020 Tamilonline