Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | அமெரிக்க அனுபவம் | சமயம் | பொது
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | அஞ்சலி | சிறப்புப் பார்வை | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku | சதுரங்கப் புலி |
Tamil Unicode / English Search
இளந்தென்றல் - மூளைக்கு வேலை
கணிதப்புதிர்கள்
- அரவிந்த்|ஜூன் 2015|
Share:
1) ஒரே மாதிரியான ஐந்து இலக்கங்களைக் கொண்டு கூட்டியோ, கழித்தோ, வகுத்தோ, பெருக்கியோ 100ஐ விடையாகக் கொண்டுவர முடியுமா?

2) 3, 7, 15, 31, .... இந்த வரிசையில் அடுத்து வரவேண்டிய எண் எது, ஏன்?

3) ஒரு படகில் 18 பெரியவர்களோ அல்லது 30 குழந்தைகளோ மட்டுமே பயணம் செய்ய முடியும். படகில் தற்போது 25 குழந்தைகள் உள்ளனர் என்றால் இன்னும் எத்தனை பெரியவர்களை படகில் ஏற்றிக்கொள்ள முடியும்?

4) சோமுவின் வயதையும் அவன் தம்பியின் வயதையும் கூட்டினால் வரும் கூட்டுத்தொகை 32. சோமு வயதின் இரண்டடுக்கையும் அவன் தம்பி வயதின் இரண்டடுக்கையும் கூட்டினால் 520 வருகிறது. சோமுவின் வயதைவிட அவன் தம்பியின் வயது நான்கு வருடம் குறைவு என்றால் சோமுவின் வயது என்ன, தம்பியின் வயது என்ன?

5) சங்கர் குதிரைப் பந்தயம் காணச் சென்றான். குதிரைகள் மற்றும் மனிதர்களின் தலையை எண்ணியபோது மொத்தம் 74 வந்தது. கால்களை எண்ணியபோது 196 வந்தது என்றால் குதிரைகள் எத்தனை, மனிதர்கள் எத்தனை?

அரவிந்த்
விடைகள்
Share: 




© Copyright 2020 Tamilonline