Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | சிறப்புப்பார்வை
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | நூல் அறிமுகம் | Events Calendar | பொது | முன்னோடி | ஜோக்ஸ் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |
Tamil Unicode / English Search
இளந்தென்றல் - மூளைக்கு வேலை
கணிதப் புதிர்கள்
- அரவிந்த்|ஜூன் 2014|
Share:
1. ராஜா ஒரு ஏழை விவசாயி. அவன் முதல் நாள் திங்கட்கிழமை வேலைக்குச் சென்றபோது குறைந்த அளவே கூலி கிடைத்தது. மறுநாள் வேலைக்குச் சென்றபோது முதல் நாளை விட நாற்பது ரூபாய் அதிகம் கிடைத்தது. புதன்கிழமை, செவ்வாய்க்கிழமை கிடைத்தைவிட நாற்பது ரூபாய் அதிகம் கிடைத்தது. வியாழக்கிழமை அன்று புதன்கிழமையில் கிடைத்ததைவிட நாற்பது ரூபாய் அதிகம் கிடைத்தது. வெள்ளிக்கிழமை வேலைக்குச் சென்றபோது வியாழக்கிழமை கிடைத்ததை விட அதிகமாக ரூபாய் நாற்பது கிடைத்தது. சனிக்கிழமை அவன் வேலைக்குச் செல்லாமல் மொத்த தொகையையும் எண்ணிப் பார்த்தபோது ஆயிரம் ரூபாய் இருந்தது. அப்படியானால் அவன் திங்கள் முதல் வெள்ளிவரை ஒவ்வொருநாளும் எவ்வளவு கூலி பெற்றிருப்பான்?

2. மகேஷ், சுரேஷ், ரமேஷ் மூவரும் சந்தைக்குச் சென்றனர். மகேஷிடம் 100 மாம்பழங்கள் இருந்தன. சுரேஷிவிடம் 80 மாம்பழங்கள் இருந்தன. ரமேஷிடம் 40 மாம்பழங்கள் மட்டுமே இருந்தன. மாம்பழங்களை ஒருவர் விற்ற விலைக்கே மற்ற இருவரும் விற்றனர். அனைத்தையும் விற்ற பிறகு ஒவ்வொருவரிடமும் ரூ. 200/ தொகை இருந்தது. அவர்கள் எந்த விலைக்குப் பழங்களை விற்றிருப்பர்?

3. 0,1,1,2,3,5,8,13,.... வரிசையில் அடுத்து வரும் எண் எது, ஏன்?

4. இரண்டு எண்களின் கூட்டுத்தொகை 45. ஒன்றிலிருந்து மற்றொரு எண்ணைக் கழித்தால் 9 விடையாக வருகிறது. ஒன்றோடு மற்றொன்றைப் பெருக்கினால் 486 வருகிறது. அந்த எண்கள் யாவை?

5. சங்கரின் வயது 48. அவனது தந்தை பாலுவின் வயது 72. எத்தனை வருடங்களுக்கு முன்னால் பாலுவின் வயது, தன் மகன் சங்கரின் வயதைப் போல மூன்று மடங்காக இருந்திருக்கும்?

அரவிந்த்
விடைகள்
Share: 




© Copyright 2020 Tamilonline