Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | எங்கள் வீட்டில் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
சித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |
Tamil Unicode / English Search
இளந்தென்றல் - மூளைக்கு வேலை
கணிதப் புதிர்கள்
- அரவிந்த்|அக்டோபர் 2013|
Share:
1) பாலாவின் வயதைவிட மாலாவின் வயது தற்போது இரு மடங்கு அதிகம். 12 வருடங்களுக்கு முன்னால் மாலாவின் வயது, பாலாவின் வயதை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. பாலா, மாலாவின் தற்போதைய வயதுகள் என்ன?

2) 1, 4, 27, 256........ வரிசையில் அடுத்து வரக் கூடிய எண், எது ஏன்?

3) சங்கர் விளையாட்டாக சில சிலந்திகளையும், வண்டுகளையும் பிடித்து ஒரு டப்பாவில் அடைத்திருந்தான். அவற்றின் மொத்த எண்ணிக்கை 9; அவற்றின் கால்களின் எண்ணிக்கை 60 என்றால் சிலந்திகள் எத்தனை, வண்டுகள் எத்தனை?

4) ஒரு பெட்டியில் 20 ரொட்டிகள் இருந்தன. அவற்றை ஆண்களுக்குத் தலா 2 வீதமும், பெண்களுக்குத் தலா 1 வீதமும், மீதமுள்ள குழந்தைகளுக்கு தலா 1/2 பங்கு வீதமும் பிரித்துக் கொண்டனர். ரொட்டியின் எண்ணிக்கையும் அவர்களின் எண்ணிக்கையும் சமமாக இருந்தது என்றால் ஆண், பெண், குழந்தைகள் எத்தனை பேர் அதனைப் பகிர்ந்து கொண்டனர்?

5) ஒருவனிடம் 50 நாணயங்கள் இருந்தன. அவற்றை தினந்தோறும் தனது சேமிப்பு உண்டியலில் போட்டு வந்தான். முதல்நாள் எத்தனை நாணயங்களை உண்டியலில் போட்டானோ அதைவிட 3 நாணயங்கள் அதிகமாக அடுத்த நாள் போடுவான். ஐந்தாம் நாள் உண்டியலில் நாணயத்தைப் போட்டதும் அவன் கையிருப்பு தீர்ந்துவிட்டது. அப்படியானால் அவன் தினம் தோறும் எத்தனை நாணயங்களை உண்டியலில் செலுத்தி வந்திருப்பான்?

அரவிந்த்
விடைகள்
Share: 




© Copyright 2020 Tamilonline