Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | அஞ்சலி
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | சாதனையாளர் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சிரிக்க சிந்திக்க
சித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |
Tamil Unicode / English Search
இளந்தென்றல் - மூளைக்கு வேலை
கணிதப் புதிர்கள்
- அரவிந்த்|ஜனவரி 2013|
Share:
1. ஒரு பாட்டில் நெய்யை எடை போட்டபோது 1.5 கிலோ இருந்தது. அதில் பாதி காலி செய்த பிறகு எடை பார்த்தால் 800கிராம் ஆக இருந்தது. அப்படியானால் பாட்டிலின் எடை என்ன?

2. வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?

22, 21, 23, 22, 24, 23, ...

3. தந்தையின் வயதோடு மகனின் வயதைக் கூட்டினால் 66 வருகிறது. மகனின் வயது, தந்தை வயதின் தலைகீழ் எண்ணாக உள்ளது. தந்தை பணியாற்றும் பள்ளியிலேயே மகனும் பள்ளி இறுதி வகுப்பில் படிக்கிறான் என்றால் அவர்களது வயதுகள் என்ன?

4. ஒரு கூடையில் ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம் சேர்த்து மொத்தம் 60 பழங்கள் இருந்தன. ஆரஞ்சைவிட ஆப்பிள்களின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகம். மாம்பழங்களின் எண்ணிக்கை ஆரஞ்சைவிட 6 அதிகம் என்றால் பழங்களின் தனித்தனி எண்ணிக்கை என்ன?

5. 7/4, 13/8 ----- 49/32, 97/64. வரிசையில் விடுபட்ட இடத்தில் வர வேண்டிய எண் எது, ஏன்?

அரவிந்த்
விடைகள்
Share: 




© Copyright 2020 Tamilonline