மரப்பாச்சி


ஜேம்ஸ் திரைப்படக் கல்லூரி மாணவர்களின் கைவண்ணத்தில் உருவாகிவரும் படம் மரப்பாச்சி. மன்னிக்கும் குணம் மனிதர்களுக்கும் தெய்வங்களுக்கும் மட்டுமல்ல; ஆன்மாக்களுக்கும் உண்டு என்ற கருத்தை வலியுறுத்தி உருவாகி வரும் இப்படத்தில் வசந்த், சுகன்யா நாயக, நாயகியாக அறிமுகமாகின்றனர். பாடல்களை முத்துலிங்கம் எழுத, பால கணேஷ் இசையமைக்கிறார். கொலைக்குச் சாட்சியாக இருக்கும் மரம், அந்தக் கொலைகாரர்களை எப்படிப் பழிவாங்குகிறது என்பதை திகில் + சஸ்பென்ஸ் + த்ரில் கலந்து சொல்கிறது இப்படம். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, ஒளிப்பதிவும் செய்து இயக்குகிறார் கே.எஸ். முத்துமனோகர்.

அரவிந்த்

© TamilOnline.com