சிகாகோ: மார்கழி உத்சவம்
2014 டிசம்பர் மாதம் கானலஹரி இசைப்பள்ளி மாணவர்கள், சிகாகோ நகரத்தின் அரோரா பாலாஜி மற்றும் லெமாண்ட் ராமர் ஆலயங்களில் திருப்பாவைப் பாசுரங்களைப் பாடினர். இந்த நிகழ்ச்சியில் 10 குழந்தைகள் பங்கேற்றனர். குரு. மரகதம் மணி அவர்கள் பாசுரங்களைச் சரியாக உச்சரிப்புடன் பாடப் பயிற்சி கொடுத்திருந்தார். அனிருத் ப்ரசன்னா, முகுந்த் ராஜேஷ், விஷ்ணுப்ரியா சிவா, லட்சுமி சிவா, காம்யா சுந்தரேசன், நிஷா, ஆஷா சுரேஷ், சுமேதா சுருபோட்லா, வனமாலா, குமார், சாரதா குமார் ஆகியோர் குருவுடன் சேர்ந்து பாடினர்.

அஞ்சனா நரசிம்மன் (வயலின்), மணி சுந்தரேசன் (புல்லாங்குழல்), லக்ஷ்மிநாராயணண் (மிருதங்கம்) ஆகியோர் பக்கம் வாசித்தனர்.

லக்ஷ்மி ஜயராமன்,
அரோரா, இல்லினாய்ஸ்

© TamilOnline.com