டாலஸ்: சப்தமியின் இசைவிழா
ஜனவரி 17, 2015 அன்று ப்ளேனோவிலுள்ள எட் குருகுல் எக்சலன்ஸ் அகாடமியில் 'சப்தமி அறக்கட்டளை' இசை மஹோத்சவம் ஒன்றை நடத்தியது. இந்த வருடாந்திர நிகழ்ச்சியில் டெக்சஸ் மாநிலத்தின் 14 கலைஞர்கள் பங்கேற்று 14 மணிநேரம் சாஹித்யகர்த்தாக்களின் கிருதிகளை வழங்கினர். நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாகப் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடகர்கள் ஒரு குழுவாகப் பாடினர். அருண் சூர்யா, ஜயகுமார் மாடபூசி, சுந்தர் சுப்பிரமணியன், நளினி ரமேஷ், கே. ஸ்ரீகாந்த் ஆகியோரைக் கொண்ட தன்னார்வலர் குழு இந்நிகழ்ச்சியைத் திறம்பட ஏற்பாடு செய்தது. இப்பகுதியில் நன்கறியப்பட்ட இசையாசிரியரான திருமதி. புவனா அஷோக் அவர்கள் திரு. ஜயந்த் ரமணியின் உதவியோடு இந்த மஹோத்சவத்தை ஒழுங்கு செய்திருந்தார்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com