கனெக்டிகட்: TNF கிளை துவக்கம்
டிசம்பர் 13, 2014 அன்று கனெக்டிகட்டில் தமிழ்நாடு அறக்கட்டளையின் கிளை, Jai Ho-CT Rhythms இசை நிகழ்ச்சியோடு, பிரிஸ்டல் ஈஸ்டர்ன் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கியது. விழாவுக்கு நியூஹாம்ப்ஷயர் கிளையின் திரு. லட்சுமிநாராயணன் முனுகூர் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். ஈகை மற்றும் கலைநிகழ்ச்சிகளின் மாதமான டிசம்பரில் இசையினால் நிதி திரட்டும் நிகழ்ச்சியை வைத்தது பொருத்தமே. ஒன்பது முதல் பத்தொன்பது வயதினரை, குறுகிய காலத்தில் தேர்வுசெய்து, பயிற்சி அளித்து இந்த நிகழ்ச்சியை நடத்திய பெருமை திரு. சம்பத் நாராயணனைச் சாரும்.

நாற்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள், திரைப்படப் பாடல்களை பல மொழிகளில் பாடினார்கள். கருவிகளை இசைத்தும், நடனம் ஆடியும் சுவை கூட்டினர். விழாவில் திரட்டப்பட்ட நிதி அறக்கட்டளையின் மூலம் 'அன்பாலயம்' என்ற மனநிலை குன்றிய இல்லத்திற்கும், கனெக்டிகட் குழந்தைகள் மருத்துவமனைக்கும் அளிக்கப்பட்டது.

டாக்டர். வரலட்சுமி நிரஞ்சன்,
கனெக்டிகட்

© TamilOnline.com