பெருமாள் கோயில் உண்டசோறு


அடுத்த தலைமுறைக்கு நாம் சேர்த்து வைக்க வேண்டியது என்ன? கார், பங்களா, பணம், நகைகளா? இல்லை என்கிறது 'பெருமாள் கோயில் உண்டசோறு'. இதில் சந்தோஷ்குமார், பாபுஜி, வி.டி. ராஜா, கீர்த்தி, சுமோ சிவா, டான்ஸ் ராஜா, ஹரேராம் சக்கரவர்த்தி, அகிலா ஆகிய புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். ஆர்.ஆர்.கார்த்திக்-பாலபாரதி இசையமைக்க, V.T .ராஜா கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். அவர், "அடுத்த தலைமுறைக்கு நாம் வீடு, பணம், கார், தோட்டம் என்று சேர்த்து வைக்கிற எதுவுமே உபயோகமில்லாததாகி விடும். நாம் சேர்த்து வைக்க வேண்டியது சுற்றுச்சூழல், சுகாதாரம், மழைநீர் சேகரிப்பு போன்றவைதான். சுற்றுச்சூழலுக்கு முதல் எதிரி பிளாஸ்டிக் தான்" என்கிறார். பிளாஸ்டிக்குக்கும் பெருமாள் கோயில் சோற்றுக்கும் என்ன சம்பந்தமோ?

அரவிந்த்

© TamilOnline.com