சிங்கப்பூர்: கண்ணதாசன் விழா
நவம்பர் 15, 2014 அன்று சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஏற்பாட்டில் கவியரசு கண்ணதாசன் விழா 2014 நிகழ்வில் கண்ணதாசன் விருதை, முனைவர் இளவழகு முருகன் அவர்களுக்குச் சிறப்பு விருந்தினர் திரு. இரா. தினகரன் வழங்கினார். படத்தில்: சிறப்புப் பேச்சாளர்கள் திரு. மரபின் மைந்தன் முத்தையா, திரு. கபிலன் வைரமுத்து, எழுத்தாளர் கழகத் தலைவர் திரு. நா. ஆண்டியப்பன், செயலாளர் திரு. சுப. அருணாசலம் மற்றும் பொருளாளர் திரு. முத்து மாணிக்கம்.

சுப. அருணாசலம்,
செயலர், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம்

© TamilOnline.com