டாலஸ்: தீபாவளித் திருநாள்
நவம்பர் 1, 2014 அன்று டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கம் செயிண்ட் அல்ஃபோன்சா மலபார் தேவாலயத்தில் தீபாவளித் திருநாளைக் கொண்டாடியது. கண்கவரும் ஆடையலங்கார அணிவகுப்புடன் தொடங்கிய விழாவில் பாட்டியும் குட்டிப்பேரனும் அனைவரையும் தன்வயப்படுத்தினர். மதுரைத் தமிழ்ப் பேச்சால் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார் பேரா. கு. ஞானசம்பந்தன்.அவர் 'திரையிசையில் இலக்கியம்' என்ற தலைப்பில் சுவைபடப் பேசினார்.

இடைவேளைக்குப்பின், Y.G. மதுவந்தி மற்றும் சுரேஷ்வர் குழுவினரின் 'சிவசம்போ' நாடகம் நடந்தது. முன்னதாகச் சங்கத் தலைவர். திருமதி.கீதா அருணாச்சலம் வரவேற்புரை வழங்கினார். துணைப்பொருளாளர் திருமதி. கஸ்தூரி கோபிநாத் நன்றி கூறினார்.

மகித்ரா,
டாலஸ்

© TamilOnline.com