ஆல்ஃபரெட்டா தமிழ்ப் பள்ளி: தீபாவளி
அக்டோபர் 19, 2014 அன்று ஆல்ஃபரெட்டா தமிழ்ப் பள்ளியின் தீபாவளிக் கொண்டாட்டம் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் தமிழ்க் கல்வி கற்கும் இப்பள்ளி, இவ்வாண்டு விளையாட்டு மைதானத்தில் ஒன்றுகூடி இனிப்பு, காரம், பட்டாசுகளுடன் பண்டிகையைக் கொண்டாடியது.

பள்ளி மாணக்கர்கள், பெற்றோர்கள், உறவினர்களுடன் புத்தாடை உடுத்தி, இனிப்புகள் உண்டு, பட்டாசு வெடித்து தீபாவளி வாழ்த்துகளை பறிமாறிக் கொண்டாடினர். அட்லாண்டா மாநகரத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் சேர்ந்து தீபாவளியைக் கொண்டாடியது இதுவே முதன்முறை.

நிகழ்ச்சியைப் பள்ளி முதல்வர் திருமதி. சுந்தரி குமார் தொடங்கி வைத்தார். துணை முதல்வர்கள் ராஜா வேணுகோபால், தங்கமணி பால்ச்சாமி, முனைவர். நிக்கோலஸ் ராஜா, பொருளாளர் ராஜி பெருமாள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிவா சேதுகணேசன், தீபா சேது, அனிதா தங்கமணி மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் உதவியுடன் பண்டிகை நடைபெற்றது.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com