தெரியுமா?: 3rd i வழங்கும் 12வது தெற்காசியத் திரைப்பட விழா
தர்டு ஐ தனது 12வது வருடாந்திரத் தெற்காசியத் திரைப்பட விழாவை 2014 நவம்பர் மாதம் 6 முதல் 9ம் தேதிவரை சான் ஃப்ரான்சிஸ்கோவின் பாலோ ஆல்டோவில் வழங்குகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் தயாரான ஆவணப்படங்கள், குறும்படங்கள், திரைப்படங்கள் முதலியவை திரையிடப்படும். தெற்காசியாவின் வளமான கலைப் பாரம்பரியத்தைக் காட்டுமுகமாக, விழாவில் நடன, இசை நிகழ்ச்சிகளும் இடம்பெற வாய்ப்புள்ளதென்பது சிறப்பு அம்சமாகும். 'கேமராவுக்குப் பின்னே மகளிர்' (Women Behind the Lens) இந்த ஆண்டும் தொடர்கிறது. இந்தியாவிலிருந்து குஜராத்தி, வங்காளி, மராட்டி, தமிழ் போன்ற பற்பல மொழித் தயாரிப்புகளும் இதில் காணக் கிடைக்கும்.

நவம்பர் 15ம் நாள் மதியம் 1:30 மணிக்குப் பாலோ ஆல்டோவின் சினி ஆர்ட்ஸில் திரையிடப்பட உள்ள 'Amma And Appa' என்ற படம் (Franziska Schonenberger and Jayakrishnan Subramaniam, India/Germany, 2014, 89mins) ஒரு ஜெர்மானியப் பெண்ணுக்கும் தமிழ் இளைஞனுக்கும் இடையேயான காதல் திருமணமாக மாறுவதில் ஏற்படும் சிக்கல்களை நகைச்சுவையோடும், உணர்வு பூர்வமாகவும் விவரிக்கிறது.

அனுஜ் வைத்யா

© TamilOnline.com