மேரியட்டா தமிழ்ப்பள்ளி: சுதந்திர தினவிழா
ஆகஸ்டு 17, 2014 அன்று மேரியட்டா தமிழ்ப்பள்ளி சுதந்திர தினவிழா கொண்டாடியது. இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவர்களையும், தியாகிகளையும் நினைவுகூரும் வகையில் குழந்தைகள் சுதந்திர தின அணிவகுப்பில் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் திரு. முரளிதரன் சுந்தரேசன் வரவேற்றுப் பேசினார்.

மாணவர்கள் வெவ்வேறு சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் போல் உடையணிந்து, பேசியும், நடித்தும் காட்டியது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. திருமதி. தீபா ஸ்ரீராம் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். விழாவின் இறுதியில் இனிப்புகள் வழங்கப்பட்டன. தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவடைந்தது.

உமா பாபா,
மேரியட்டா, ஜார்ஜியா

© TamilOnline.com