பாலசாகித்ய அகாதமி விருது
இந்திய மொழிகளில் குழந்தைகளுக்கான சிறந்த படைப்புகளைத் தருபவர்களுக்கு ஆண்டுதோறும் பாலசாகித்ய அகாதமி விருது வழங்கி வருகிறது சாகித்ய அகாதமி. இவ்வாண்டு இதற்கு 24 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழுக்கான விருதை இரா. நடராசன் பெறுகிறார். அவர் எழுதிய "விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள்" இவ்விருதை வென்றிருக்கிறது. கடந்த ஆண்டுகளில் கமலவேலன், ம.லெ. தங்கப்பா உள்ளிட்டோர் இவ்விருதைப் பெற்றுள்ளனர். பள்ளி முதல்வராகப் பணியாற்றி வரும் இரா. நடராசன், குழந்தைகளுக்கான கல்விமுறை மீது மிகுந்த அக்கறை கொண்டவர். "வகுப்பறை ஜனநாயகம்" என்னும் இவரது பயிற்றுவிப்பு முறை மிகுந்த வரவேற்பைப் பெற்ற ஒன்று. நல்லாசிரியர்களுக்கு வழங்கப்படும் டாக்டர். ராதாகிருஷ்ணன் விருது உட்படப் பல பாராட்டுக்களை நடராசன் பெற்றிருக்கிறார். மேலும் விவரங்களுக்குப் பார்க்க: தென்றல், அக்டோபர் 2012.



© TamilOnline.com