கலியன் சம்பத் இலக்கிய உரை
ஜூன் 29, 2014 அன்று பாரதி தமிழ்ச் சங்கத்தில், சென்னைப் பல்கலைக் கழக வைணைவத் துறை பேராசிரியரும் தமிழறிஞருமான முனைவர். கலியன் சம்பத் உரையாற்றினார். சம்பத் திருக்குறளில் ஒவ்வொரு மனிதனும் அவசியம் படித்துக் கடைப்பிடிக்க வேண்டிய பத்து குறள்களையும் அவை சொல்லும் அதே அறங்கள் ஆழ்வார் பாசுரங்கள், பெரிய புராணம் போன்ற சமய இலக்கியக்கியங்களிலும் வலியுறுத்தப் பட்டிருப்பதை உதாரணங்களுடன் ஒப்பிட்டு விளக்கினார். அந்தக் குறள்கள் தமிழிலக்கியங்களில் எடுத்தாளப்பட்டுள்ள விதத்தையும் அருமையாக விளக்கினார்.

திருமலை ராஜன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com