ப்பா.. வேணாம்ப்பா...


குடியின் தீமையை வலியுறுத்தித் தமிழில் வெளியான முதல் படம் ராஜாஜி எழுதிய 'திக்கற்ற பார்வதி'. நீண்ட காலத்துக்குப் பிறகு மீண்டும் குடியின் தீமைகளை மட்டுமே முழுக்க முழுக்க வலியுறுத்தி உருவாகி வரும் படம் 'ப்பா.. வேணாம்ப்பா..' தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் இயக்குநராகப் பணிபுரிந்த வெங்கட்ரமணன் இதை இயக்குகிறார். கதாநாயகனாக நடிப்பதும் அவரே! முற்றிலும் புதுமுகங்களை வைத்துக் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்திற்கு இசை விகே கண்ணன். TTK மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரியும் டாக்டர். சிவசுப்ரமணியன் இப்படத்தில் மருத்துவராகவே வருகிறார். குடிகாரர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களைக் கொண்டே படம் தயாரிக்கப் பட்டிருப்பது படத்தின் பலம்.

அரவிந்த்

© TamilOnline.com