புதிய கதை
நான் சொன்ன கதையை
தன் தங்கைகளுக்கு
சொல்லிக் கொண்டிருந்தவளுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
தான் சொல்லும் புதிய கதை ஒன்றை
ஆவலுடன்
தகப்பன் கேட்டுக் கொண்டிருக்கிறான்
என்பது!

*****


முதல் ஊதியம்

இந்தாங்ப்பா
என்றேன்!
அம்மாகிட்ட
குடுப்பா என்றார்!
உவப்பு
இரட்டிப்பானது
அம்மா
அப்பா
நான்
எல்லாருக்கும்!

*****


அவள்

நீ நல்லாயிருக்கியா
எனக் கேட்டேன்?
நீ எப்பிடியிருக்கே
என்றாள் அவள்.
நான் நல்லா இருக்கேன்
என்றதும் துளிர்ப் புன்னகை!
நலமாய் இராதவள்
நலமானதைப் போல!

பழமைபேசி,
சென்டர்வில், டென்னசி

© TamilOnline.com