அரங்கேற்றம்: அஷ்மிதா ராஜேந்திரன்
ஏப்ரல் 27, 2014 அன்று கூபெர்டினோ டி ஆன்சா கல்லூரி வளாகத்திலுள்ள விஷுவல் அண்ட் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் சென்டரில் குரு இந்துமதி கணேஷ் அவர்களின் ந்ருத்யோலாசா டான்ஸ் அகாடெமி மாணவி செல்வி. அஷ்மிதா ராஜேந்திரனின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தேறியது.

புஷ்பாஞ்சலியில் ஆரம்பித்து அக்னி தேவன் பற்றிய கவுத்துவத்திற்கு அற்புதமாக ஆடினார் அஷ்மிதா. கல்யாணி ராகத்தில் அமைந்த வர்ணம் கிருஷ்ணனின் பெருமைகளை விளக்குவதாக அமைந்தது. இதில் அஷ்மிதா காண்பித்த முகபாவங்கள் மிகவும் அருமை. பாபநாசம் சிவனின் 'இடது பாதம்' பாடலுக்கு நடராஜரைக் கண்முன் கொணர்ந்தார். முத்தையா பாகவதரின் 'ஹிமகிரி தனயே', சுப்பராம ஐயரின் 'அறிவேன் ஐயா', லால்குடி ஜெயராமனின் தில்லானா ஆகியவற்றுக்கும் சிறப்பாக ஆடி அவையினரை மெய்சிலிர்க்க வைத்தார்.

குரு இந்துமதி கணேஷ் (நட்டுவாங்கம்), திருமதி. வித்யா ஐயர் (நட்டுவாங்கம்), திருமதி. ஆஷா ரமேஷ் (பாட்டு), திருமதி. லக்ஷ்மி பாலசுப்ரமணியம் (வயலின்), திரு. ரவீந்திரபாரதி ஸ்ரீதரன் (மிருதங்கம்), அஷ்வின் கிருஷ்ணகுமார் (புல்லாங்குழல்) கூட்டணியில் அஷ்மிதாவின் அரங்கேற்றம் சிறப்பாக நடந்தேறியது.

நாட்டேரி அமிர்தவல்லி,
கலிஃபோர்னியா

© TamilOnline.com