பாலகுமாரனின் வசனத்தில்........
எழுத்தாளர் பாலகுமாரனின் வசனத்தில் விரைவில் வெளிவரவிருக்கிறது 'நினைத்து நினைத்து பார்த்தேன்'. இப்படத்தில் விக்ராந்த் நாயகன், ஆஷிதா நாயகி.

ஜே.ஜே. குட் பிலிம்ஸ் பாபு ராஜா தயாரிப்பில் ஆர்.பி. சவுத்ரி இப்படத்தை வழங்குகிறார்.

இப்படத்திற்கான இசையை ஜோஷ¤வா ஸ்ரீதர் அமைக்க, கவிஞர் நா. முத்துக்குமார் பாடல்களை எழுதியிருக்கிறார்.

கதை, திரைக்கதை, இயக்கத்தை மணிகண்டன் கவனிக்கிறார். படத்தில் கருணாஸ், ராஜேஷ், நந்திதா, ரீனா, மலேசியா வாசுதேவன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com